பிரான்சில் கொரோனா வைரசின் 3-வது அலை

பிரான்சில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களும் 3 வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவித்த இமானுவேல் மேக்ரான், “ தற்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் கட்டுப்பாட்டை இழந்து விடுவோம்.  தடுப்பூசி போடுவதே சிறந்த தீர்வாக இருக்கும்” என்றார். 

மேலும், மே மாதம் நடுப்பகுதியில் நாட்டில் சகஜ நிலை திரும்பும் என நம்புவதாகவும் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் படி, பகல் நேரத்தில் மக்கள் 10 கி.மீட்டர் சுற்றளவு மட்டுமே செல்ல முடியும். அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்தியாளர் ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.