காவல்துறையினருக்கு நன்றி பாராட்டு

சென்னை, டி.பி.சத்திரத்தை சேர்ந்த சங்கீதா, 05.01.2021 அன்று சமூகவளைத்தில் வந்த ஆன்லைன் பொருட்கள் விற்கும் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து, ஒரு பொருளை வாங்குவதற்காக ரூ.6,500/-ஐ கூகுள் பே மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் பல நாட்களாகியும் பொருள் வராததால், இணையதளத்தில் கொடுத்த புகாரின் பேரில், கீழ்பாக்கம் சைபர் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கீழ்பாக்கம் சைபர் குற்றப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டு சங்கீதா பொருள் வாங்க பணம் செலுத்திய ஆன்லைன் நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் விவரங்கள் அனுப்பியும், நிர்வாகத்திடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். இதன் மூலம் மேற்படி நிறுவனம் புகார்தாரர் சங்கீதாவிற்கு அவர் செலுத்திய பணம் ரூ.6,500/- திருப்பி செலுத்தியுள்ளனர். பணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்த கீழ்பாக்கம் சைபர் குற்றப்பிரிவினர் மற்றம் காவல்துறையினருக்கு, புகார்தாரர் சங்கீதா நன்றி தெரிவித்து பாராட்டினார்.

எஸ் செந்தில்நாதன் இணை ஆசிரியர்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.