ரூ.50,000 ரூபாய்க்கும் அதிகமாக பணம் – சத்யபிரதா சாகு!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை கொண்டு சென்றால் அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 6 ஆயிரத்தில் இருந்து 7 ஆயிரம் வாக்குச் சாவடிகள் வரை பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணத்தை கொண்டு சென்றால் அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் எனவும் டிஜிட்டல் பணப்பரிமாற்றமும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.