பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிரணியினர் சார்பாக இருசக்கர வாகன பேரணி

மாண்புமிகு பாரத பிரதமர் மோடிஜி அவர்கள் 25ம் தேதி கோவை வருவதையொட்டி பாஜக திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிரணியினர் சார்பாக இருசக்கர வாகன பேரணி மாவட்ட மகளிரணி தலைவி திருமதி சுதாமணிசதாசிவம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிரணி பொதுச்செயலாளர் திருமதி.மோகனபிரியா கலந்துகொண்டார்கள். இப்பேரணியை திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு.செந்தில்வேல் ஜி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

செய்தியாளர் கலைவேந்தன்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.