பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திறனறி போட்டிகள் நடத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்ததால், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை எழுதுதல் ஆகிய திறனரி போட்டிகள், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் கல்வி மாவட்ட அளவில் நடத்தப்பட உள்ளது. அதனால் அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் சிறந்த நான்கு மாணவர்களை தேர்வு செய்து போட்டிகளில் பங்கேற்க வைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.