கலியுகக் கர்ணன் சிவாஜி கணேசன்!

திருச்சி அருகே திருவானைக்காவல் கோவிலில் உள்ள யானை நடிகர் திலகம் சிவாஜியால் வழங்கப்பட்டது.

அந்த யானையை பராமரிக்க முடியாத நிலையில் கோவில் நிர்வாகம் திரு.சிவாஜியிடம் எங்கள் கோவில் வருமானத்தில் யானைக்குத் தீனி போடமுடியவில்லை. வேறு கோவிலுக்கு யானையை கொடுத்து விடுங்கள் என்று கூறினார்களாம்.

அதற்கு நடிகர் திலகம் நாளை வாருங்கள் பதில் சொல்கிறேன் என்று கூறினாராம். ஒருவாரம் வரை பதில் வராத காரணத்தால் கோவில் நிர்வாகம் மீண்டும் நடிகர் திலகத்தைக் காணச் சென்றபோது அவர் சொன்ன வார்த்தை நிர்வாகத்திற்கு அதிர்ச்சிஅளித்தது.
என்ன நடந்தது என்றால் கோவிலுக்கு அருகே இரண்டு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும்.
அந்த விளை நிலத்தில் பயிர் செய்து வரும் வருமானத்தில் கோவிலுக்கும் யானைக்கும், யானை பாகனுக்கும், விவசாயிக்கும் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், யானை பாகனுக்கும், விவசாயிக்கும், வீடு ஒன்று அமைத்து தருவதாகவும் கூறி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்
நடிகர் திலகம்.

இன்று வரை அது நடந்து கொண்டிருக்கிறது. அந்த யானை இறந்த பிறகு மீண்டும் ஒரு யானையை வாங்கி கொடுத்துள்ளார் கலைவாரிசு இளைய திலகம் பிரபு அவர்கள் என்று கோவிலுக்கு சமீபத்தில் சென்றபோது இதைச் சொன்னார் யானைப்பாகன்.

சொல்லாமல் செய்யும் கலியுகக் கர்ணன் குடும்பம்.

கஜதானம் (யானைதானம்) செய்வது நாடு செழிப்புடன் எந்தவிதப் பஞ்சமும் இல்லாமல் மக்களை வாழச் செய்யும் தானம். இதுபோல் கோவில்களுக்கு ஆறு யானை வாங்கி கொடுத்துள்ளார் நடிகர் திலகம் என்பது குறிப்பிட தக்கது.

படித்ததில் வியந்தது
வே. இராஜவர்மன் டில்லி தலைமை

Leave a Reply

Your email address will not be published.