உலகப் பாவை – தொடர் – 29

திருக்குறள்: உலகப் பாவை

   29.  அறிவியலால் ஆக்கம் 

           வேண்டும்            

அறிவியலால் இயற்கை

தன்னை

அணுவணுவாய் அறிந்து

மாந்தர்

பொறிதெளிந்து கூடி வாழும் புதியநெறி புலர வேண்டும்;

வெறிகொண்ட மனிதப்

போக்கு

வேற்றுமைகள், தீமை யாவும் அறிவியலின் ஆற்றல்

தன்னால்

அழிவின்வாய்ச் சேர வேண்டும்;

அறிவியலால் உலகம் எங்கும் அன்புறவு  பூத்துச் சான்றோர்  குறிக்கொள்ளும் நலன்கள் யாவும்

கூடியேகை கூடல் வேண்டும்;

அறிவியலால் அமைதி ஓங்கி அனைத்துலகும் மேன்மை காண உரியவழி எடுத்துக் கூறி

உலாவருவாய் உலகம் பாவாய்!

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு

நிறுவனர்

உலகத் திருக்குறள் மையம்

திருக்குறள்: உலகத் திருக்குறள் மையம், சென்னை

Leave a Reply

Your email address will not be published.