உலகப் பாவை தொடர் -3

உலகப் பாவை-தொடர்-3

உயிர் பிறப்பால் ஒன்றே

விண்மண்நீர் நெருப்பு காற்று விந்தாகிச் சேர்ந்த சேர்க்கை மண்ணுலக மனிதன்; எல்லா வளர்உறுப்பும் மனிதர்க் கொன்றே!

அன்பெனும்நல் வேலி யிட்ட அன்னையின் வயிறு தானே மண்ணிடைஎம் மனித ருக்கும் வாய்த்திட்ட பிறப்புக் கூடு!

வண்ணத்தில் குருதி என்றும் மாறுவதோ மனிதர்க்
கில்லை;
எண்ணுகிற ஆற்றல் கூட எல்லார்க்கும் உண்டே? எங்கே

உண்டிங்கு வேறு பாடு?
‘உயிர்பிறப்பால் ஒன்றே’ என்னும்
உண்மையுயிர் பெற்று லாவ உலாவருவாய் உலகப் பாவாய்!

  • கு. மோகனராசு
    நிறுவனர்
    உலகத் திருக்குறள் மையம்

Leave a Reply

Your email address will not be published.