ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..

தளர்வுகளுடன்
ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
மத்திய அரசு அறிவிப்பு!

உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜனவரி -31 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது கேரளாவிற்கும் பரவிவிட்டது. இது அதிக வேகமாக பரவி வருவதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

இதையடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழும்பி வந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊரடங்கு தொடரும், நோய் தொற்று உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தொடரும். உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து கூடுதல் விழிப்புணர்வு வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.