குடும்ப அட்டையில் இந்த எழுத்து இருந்தால்…

உங்கள் குடும்ப அட்டையில் இந்த எழுத்து இருந்தால் பொருட்கள் இலவசம்!

குடும்ப அட்டைதாரர்கள் இம்மாதம் இலவச பொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரரீதியாக பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இதை சரிகட்ட அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இருப்பினும் இது போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி என்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

அதற்கு அடுத்தவாரம் முதல் இந்த நடைமுறை தொடர்ந்து ஆயிரம் ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டது. அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசு அதற்கான டோக்கன் களையும் வழங்கியுள்ளது. டிசம்பர் 2,3,5 ஆகிய தேதிகளில் PHH மற்றும் AAY ரேஷன் அட்டைதாரர்களுக்கும், 7,8,9,10 ஆகிய தேதிகளில் NPHH அட்டைதாரர்களும் பொருட்களை பெற்றுக் கொள்ள வழிவகை செய்துள்ளது.

இதற்கு ஸ்மார்ட் கார்டில் போட்டோவுக்கு கீழ் PHH அல்லது AAY என்று இருந்தால் 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்படும் என்றும், NPHH என்று இருந்தால் ஒரு கிலோ துவரம்பருப்பு இலவசமாக நியாய கடையில் வழங்கப்படும் என்றும், மற்ற பொருள்கள் வழக்கம்போல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.