ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை”

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை” என்று வாசகத்தை பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு தமிழக அரசால் அதிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை கடைபிடித்து வருகின்றனர்.இந்நிலையில், சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் “ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை” வாசகங்களை காட்சிப்படுத்த போக்குவரத்து போலீசாருக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும், மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்: S. ரவூப்

Leave a Reply

Your email address will not be published.